Thursday 23 March 2017

07. திருமயிலை சிங்காரவேலவன்

சந்தப் பாடல்.
அடியேனின் முதல் முயற்சி.

சந்தம்:
தனதனன தனதான

திருமயிலை சிங்காரவேலவன்

கயிலைமலை தனிலாடும்
..கருணைமிகு பெரியோனின்
நயனவெழு கதிரோனே
..நளினமுக முருகோனே
இயலிசையில் மகிழ்வோனே
..இமையவர்தம் இறையோனே
மயிலைநகர் உறைவேளே
..மனநிறைவு தருவாயே

கதிரோனே-கதிரிலிருந்து வந்தவன் அல்லது கதிரொத்த பிரகாசம் உடையவன்.



No comments:

Post a Comment