Friday 1 December 2017

20. வண்ணப் பாடல் - 02 - திருமயிலை

ராகம் - நளினகாந்தி தாளம் - ஆதி சந்தக் குழிப்பு: தனதன தனதன தனதான விரிசடை யினிலொலி நதியோடு ..மிளிரழ குடைமதி புனைவோனே கரமதி லொளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரையெரு தினிலம ரதிதீரா ..நளினம துரமுக உமைபாகா
திருவடி நிழலினை அருள்வாயே
..திருமயி லையிலுறை பெருமானே பதம் பிரித்த வடிவம் : விரிசடையினில் ஒலிநதியோடு ..மிளிரழ(கு) உடைமதி புனைவோனே கரமதில் ஒளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரை எருதினில் அமர் அதிதீரா ..நளின மதுரமுக உமைபாகா திருவடி நிழலினை அருள்வாயே
திருமயிலையில் உறை பெருமானே

சரண்யா.

No comments:

Post a Comment