Friday 8 December 2017

21. வண்ணப் பாடல் - 03 - திருச்சிராப்பள்ளி

ராகம் - சிந்துபைரவி தாளம் - விலோம சாபு (மிஸ்ரசாபு வின் reverse) சந்தக் குழிப்பு: தனதன தான தனதன தான தனதன தான தனதான வியனென வாகி வளியொளி யாகி விரிபுன லாகி நிலமாகி ..விதையது வாகி விதியது மாகி விமலசொ ரூப நிலையாகி உயரிய ஞான மறைபொரு ளாகி உயிரொலி யாகி நிறைவோனே ..உனதிரு பாத மகிமையை நாளும் உவகையொ டோத அருள்வாயே அயனரி யாதி அமருல கோரும் அறியவொ ணாத வடிவோனே ..அறுமுக னோடு மிபமுக னோடும் அழகுடன் ஆடும் அயிலோனே செயமுக மீது சிறுநகை யோடு சிரகிரி மேவு பெருமானே ..சிறியனை ஆள நரைவிடை ஏறி விழைவொடு நீயும் வருவாயே விதை - மூலம் / தொடக்கம் விதி - முறை / வழிமுறைகள் உயிரொலி - பிரணவம் அயில் - சூலம் செயமுகம் - செய - வெற்றி அல்லது (செய்ய -> செய) அந்தி வண்ணம் (சிவப்பு நிறம்) தவழும் முகம் விழைவொடு - மகிழ்வொடு பாடலைக் கேட்க: https://drive.google.com/open?id=0By387kvntVlPSDBYSXViZjFFLWM சரண்யா

No comments:

Post a Comment