Friday 8 December 2017

22. வண்ணப் பாடல் - 04 - திருவானைக்கா

ராகம் - துர்கா
தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை)

தய்ய தான தனதனனா

வெள்ளை நாவல் அடியமரும்
..மெய்ய னேவெல் விடையுடையாய்
உள்ள மார உனைநினைவேன்
..உய்யு மாறு தனையருள்வாய்
தெள்ளி யார ணியமுறையும்
..செய்ய மேனி உடையவனே
வெள்ள மாகி நிறைபவனே
..வெய்ய ஊறு களையரிவாய்

வெள்ளை நாவல் - ஆனைக்கா ஸ்தல வ்ருக்ஷம்
உய்யு மாறு - உய்யும் ஆறு (வழி)
தெள்ளி - யானை
தெள்ளி ஆரணியம் - ஆனைக்கா
வெள்ளம் - நீர் (அப்பு ஸ்தலம்)
வெய்ய ஊறுகளை அரிவாய் - கொடிய துன்பத்தை அழிப்பாய்

பாடலைக் கேட்க:

https://drive.google.com/open?id=0By387kvntVlPLTRYcmZYeDBKOU0

No comments:

Post a Comment