Friday 20 April 2018

36. வண்ணப் பாடல் - 09 - திருவானைக்கா (கரிவனம்)

ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம் (சதுஸ்ர ரூபகம்) [1 த்ருதம், 1 லகு (நான்கு அக்ஷரம்) = 2 + 4 = 6 எண்ணிக்கை]

தனத்த தனதன தனதன தனதன தனதான

விரித்த சடையினில் விரிநதி இளமதி முடிவோனே
.விழித்த கணமதில் ரதிபதி தனைஎரி அனலோனே

கருத்த மதகரி யதனுரி வையையணி மறவோனே
.கழுத்தி லலைகட லினிலெழு விடமதை உடையோனே

அருத்தி யுடனரு மலர்களை அணிகுளிர் புனலோனே
.அரிக்கி ளையவளின் அருதவ மதில்அகம் மகிழ்வோனே

சிரித்த முகமொடு கரிவனம் அதிலமர் பெருமானே
..சிறப்பொ டடியவர் உலகினில் உயர்வுற அருள்வாயே 

அருத்தியுடன் அருமலர்களை - ஆசையுடன் அருமையான மலர்களை

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1kO9SwQXed5B4cVkoj8RMeaVpczSPXI-L

No comments:

Post a Comment